Sunday, February 17, 2013

வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்கு உறுதி?




வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று நிராகரித்துள்ளார். இதனால் அவர்கள் விரைவில் தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிகிறது. கடந்த 1993-ஆம் ஆண்டு பாலார் காட்டில், வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து 21 போலீஸாரை குண்டு வைத்துக் கொன்றனர். இந்த வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் ஞானப் பிரகாசம், சைமன், மாதையா, பிலவேந்திரன் என்கிற‌ நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். நான்கு பேரின் சார்பில் ஜனாதிபதிக்கு கருணை மனுக்கள் அளிக்கப்பட்டன. தற்போது அந்த மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். இதனால் நாலவரும் விரைவில் தூக்கிலிடப்படுவார்கள் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இவர்கள் நான்கு பேரும் கர்நாடகவில் உள்ள‌ பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எல்லாம் சரி காவல் துறை மற்றும் அதிரடிப்படை போலிஸால் பாலியல் ரீதியாக சீரழிக்கப்பட்ட பல குடும்பங்களின் தற்கொலைக்கு காரணமான காவலர்களுக்கு என்ன தண்டனை??
 

No comments:

Post a Comment