கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
சாத்தூர் தாலுகாவை சார்ந்த சிற்றூராக இருந்த கோவில்பட்டி இன்று தூத்துக்குடி மாவட்டத்தின் வருவாய் தரும் தொழில்சார்ந்த நகரமாக விளங்குகிறது. இவ்வூருக்கு கோயிற்புரி, திருப்பூவனம், பொன்மலை, கோயில்புரி என்றெல்லாம் பெயர் விளங்குகிறது.சிற்றூராக இருந்துவந்த இவ்வூரானது இன்று ஒரு சிறப்பு நிலைநகராட்சியாகத் திகழ்கிறது. பல வகைகளிலும் சிறப்புப் பெற்ற பல ஊர்கள் செண்பகவல்லியம்மன் கோவில் திருத்தலத்தை சுற்றிலும் அமைந்துள்ளது தனிச்சிறப்பான ஒன்றாகும்.
இந்நகரைச் சுற்றியுள்ள ஊர்களில் முக்கிய விளைபொருட்கள் பருத்தி, நிலக்கடலை மற்றும் கேழ்வரகு, கம்பு போன்ற தானிய வகைகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் பருத்தியை மூலப்பொருளாகக் கொண்டு லக்ஷ்மி, லாயல் எனும் இரண்டு பெரிய நூற்பாலைகள் அமைந்துள்ளன. கோவில்பட்டி நகரம் தீப்பெட்டி தயாரிப்புக்கு பெயர் பெற்றது. இங்கு சில பட்டாசுத் தொழிற்சாலைகளும் உண்டு.
கோவில்பட்டி கடலை மிட்டாய் மிகவும் பிரசித்தி பெற்றது. புரட்சிக்கவி பாரதியார் பிறந்த எட்டயபுரம் இங்கிருந்து 17 கி.மீ தொலைவில் இருக்கிறது.
சாத்தூர் தாலுகாவை சார்ந்த சிற்றூராக இருந்த கோவில்பட்டி இன்று தூத்துக்குடி மாவட்டத்தின் வருவாய் தரும் தொழில்சார்ந்த நகரமாக விளங்குகிறது. இவ்வூருக்கு கோயிற்புரி, திருப்பூவனம், பொன்மலை, கோயில்புரி என்றெல்லாம் பெயர் விளங்குகிறது.சிற்றூராக இருந்துவந்த இவ்வூரானது இன்று ஒரு சிறப்பு நிலைநகராட்சியாகத் திகழ்கிறது. பல வகைகளிலும் சிறப்புப் பெற்ற பல ஊர்கள் செண்பகவல்லியம்மன் கோவில் திருத்தலத்தை சுற்றிலும் அமைந்துள்ளது தனிச்சிறப்பான ஒன்றாகும்.
இந்நகரைச் சுற்றியுள்ள ஊர்களில் முக்கிய விளைபொருட்கள் பருத்தி, நிலக்கடலை மற்றும் கேழ்வரகு, கம்பு போன்ற தானிய வகைகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் பருத்தியை மூலப்பொருளாகக் கொண்டு லக்ஷ்மி, லாயல் எனும் இரண்டு பெரிய நூற்பாலைகள் அமைந்துள்ளன. கோவில்பட்டி நகரம் தீப்பெட்டி தயாரிப்புக்கு பெயர் பெற்றது. இங்கு சில பட்டாசுத் தொழிற்சாலைகளும் உண்டு.
கோவில்பட்டி கடலை மிட்டாய் மிகவும் பிரசித்தி பெற்றது. புரட்சிக்கவி பாரதியார் பிறந்த எட்டயபுரம் இங்கிருந்து 17 கி.மீ தொலைவில் இருக்கிறது.

No comments:
Post a Comment